search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிக்கு திரும்பிய ஆசிரியை பாடம் நடத்துவதை படத்தில் காணலாம்.
    X
    பணிக்கு திரும்பிய ஆசிரியை பாடம் நடத்துவதை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பணிக்கு திரும்பிய 90 சதவீத ஆசிரியர்கள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். #JactoGeoStrike #TeachersProtest
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் மாணவர் சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகள் முடங்கியுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    பணிக்கு வராமல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். மறியலில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அரசின் கெடுபிடியால் தற்போது ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தகுமார் கூறுகையில்,

    ஆசிரியர்கள் வருகை இல்லாத பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் சங்க பொறுப்பாளர்கள் மட்டும் பணிக்கு வரவில்லை. மற்றவர்கள் வந்துவிட்டனர்.

    மாவட்டத்தில் 90 சதவீத அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றார்.  #JactoGeoStrike #TeachersProtest


    Next Story
    ×