என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் காண்டிராக்டர் வீட்டில் 60 பவுன் நகை-பணம் கொள்ளை
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சேர்ந்தவர் முகமது ரசீம். அரசு காண்டிராக்டராக உள்ளார். இவர் பொங்கல் பண்டிகையையொட்டி தனது குடும்பத்துடன் மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு முகமது ரசீமின் வீட்டில் மாடி வழியாக ஏறி குதித்தனர். அங்கு ஜன்னல் திறந்திருந்ததால் அதன் வழியாக புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
மறு நாள் காலை முகமது ரசீம் வீடு திரும்பினார். அபபோது வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 60 பவுன் நகை, ரூ1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
பதறிப்போன அவர் இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை எடுத்து சோதித்து பார்த்தனர்.
ஆனால் கொள்ளையர்கள் முதலில் கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு அதில் இருந்த டிஸ்க்குகளை எடுத்து சென்றுள்ளனர். எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முகமது ரசீமின் தந்தை ஹைதர் அலி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது மிளகாய் பொடி தூவி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஹைதர் அலி தெரிவித்தார்.
எனவே ஏற்கனவே நடந்த கொள்ளைக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அதன் அடிப்படையிலும் போலீசார் தீவிரமாக துப்பு துலங்கி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்