என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக மக்களால் உண்டான பேரியக்கம்- சைதை துரைசாமி
Byமாலை மலர்22 Oct 2018 5:02 AM GMT (Updated: 22 Oct 2018 5:02 AM GMT)
அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம் என்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் சைதை துரைசாமி பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
திருச்சி:
திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை வெளியிட்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். பொதுமக்களுக்காகவே கடைசி வரை உழைத்த மனிதர். சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காகவே பாடுபட்டவர். திராவிட இயக்கத்தை அடித்தட்டு மக்கள் வரையில் கொண்டு சேர்த்ததுடன் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிப்பெற்று தி.மு.க. ஆட்சியமைக்க இரவு, பகல் பாராமல் கடந்த 1971-ம் ஆண்டு வரை கடுமையாக உழைத்தவர்.
கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை சுயநலத்துக்காக சூழ்ச்சியின் மூலம் கட்சியில் இருந்து வெளியேற்றியவர் கருணாநிதி. இவரின் வழி வந்து குறுக்கு வழியில் தற்போது தி.மு.க. தலைவராக இருப்பவர் ஸ்டாலின்.
இவர் அ.தி.மு.க. துரோகத்தின் தொடக்கம் என்று கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளார். 1965-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. தலைவர்களின் கடைசி பட்டியலில் இருந்தவர் கருணாநிதி. இவர் அண்ணாதுரையுடன் நெருக்கமாக இருந்த அறிவு ஜீவிகளை கட்சியில் இருந்து தனது சுய நலத்துக்காக வெளியேற்றியவர்.
கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்றிய கருணாநிதிதான் துரோகத்தின் தொடக்கம். அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பின்னர் தமிழகத்தில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. மக்களிடம் புரட்சி வெடித்தது. இதன்மூலம் உருவான கட்சி தான் அ.தி.மு.க. ஆகும்.
கருணாநிதி செய்த துரோகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டுதான் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரையில் தி.மு.க.வை தோல்வியடைய செய்தனர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கிய போது கருணாநிதியின் வாரிசாக மு.க.முத்து மட்டுமே இருந்தார். பின்னர் தனது சூழ்ச்சியால் தலைமை பதவிக்கு வந்திருப்பவர் ஸ்டாலின். இவர் அ.தி.மு.க. குறித்து பேச தகுதியில்லாதவர். தி.மு.க.வை பொறுத்த வரையில் மூத்த தலைவர்களுக்கு தான் தலைவர் பதவி கொடுக்கவேண்டும்.
அன்பழகன் இருக்கும் போதே, ஸ்டாலின் தான் தலைவர் என்று குடும்ப அரசியலுக்காக சுய நலத்துடன் கடைசி வரையில் இருந்தவர் தான் கருணாநிதி. இவர்கள் மக்களுக்காகவே உழைத்த எம்.ஜி.ஆர்.மீது தற்போது சேற்றை வாரி இறைக்கின்றனர். எம்.ஜி.ஆர்.மீது குறை சொல்லும் யாரையும் பொது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் எம்.ஜி. ஆரின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். குறித்த புத்தகத்தை வெளியிட்டும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். பொதுமக்களுக்காகவே கடைசி வரை உழைத்த மனிதர். சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காகவே பாடுபட்டவர். திராவிட இயக்கத்தை அடித்தட்டு மக்கள் வரையில் கொண்டு சேர்த்ததுடன் மட்டுமின்றி தேர்தலில் வெற்றிப்பெற்று தி.மு.க. ஆட்சியமைக்க இரவு, பகல் பாராமல் கடந்த 1971-ம் ஆண்டு வரை கடுமையாக உழைத்தவர்.
கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை சுயநலத்துக்காக சூழ்ச்சியின் மூலம் கட்சியில் இருந்து வெளியேற்றியவர் கருணாநிதி. இவரின் வழி வந்து குறுக்கு வழியில் தற்போது தி.மு.க. தலைவராக இருப்பவர் ஸ்டாலின்.
இவர் அ.தி.மு.க. துரோகத்தின் தொடக்கம் என்று கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளார். 1965-ம் ஆண்டுக்கு முன்பு தி.மு.க. தலைவர்களின் கடைசி பட்டியலில் இருந்தவர் கருணாநிதி. இவர் அண்ணாதுரையுடன் நெருக்கமாக இருந்த அறிவு ஜீவிகளை கட்சியில் இருந்து தனது சுய நலத்துக்காக வெளியேற்றியவர்.
கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்றிய கருணாநிதிதான் துரோகத்தின் தொடக்கம். அ.தி.மு.க. பொது மக்களால் உண்டான பேரியக்கம். கட்சியில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பின்னர் தமிழகத்தில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. மக்களிடம் புரட்சி வெடித்தது. இதன்மூலம் உருவான கட்சி தான் அ.தி.மு.க. ஆகும்.
கருணாநிதி செய்த துரோகத்தை பொதுமக்கள் தெரிந்து கொண்டுதான் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும் வரையில் தி.மு.க.வை தோல்வியடைய செய்தனர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. தொடங்கிய போது கருணாநிதியின் வாரிசாக மு.க.முத்து மட்டுமே இருந்தார். பின்னர் தனது சூழ்ச்சியால் தலைமை பதவிக்கு வந்திருப்பவர் ஸ்டாலின். இவர் அ.தி.மு.க. குறித்து பேச தகுதியில்லாதவர். தி.மு.க.வை பொறுத்த வரையில் மூத்த தலைவர்களுக்கு தான் தலைவர் பதவி கொடுக்கவேண்டும்.
அன்பழகன் இருக்கும் போதே, ஸ்டாலின் தான் தலைவர் என்று குடும்ப அரசியலுக்காக சுய நலத்துடன் கடைசி வரையில் இருந்தவர் தான் கருணாநிதி. இவர்கள் மக்களுக்காகவே உழைத்த எம்.ஜி.ஆர்.மீது தற்போது சேற்றை வாரி இறைக்கின்றனர். எம்.ஜி.ஆர்.மீது குறை சொல்லும் யாரையும் பொது மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #MGR #SaidaiDuraisamy #Karunanidhi #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X