என் மலர்
செய்திகள்

வேலூர் ஜெயிலில் நளினி, முருகன் உருக்கமான சந்திப்பு- விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு
கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். #RajivGandhiCase #Nalini
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.
காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.
கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.
காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.
கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini
Next Story






