என் மலர்
செய்திகள்

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.12 லட்சம் தங்கம் கடத்தல்
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சூட்கேசுக்குள் கம்பியாக வளைத்து கடத்திய ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசின் உள் பகுதியில் உள்ள விளிம்பில் தங்கத்தை கம்பியாக வளைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து 400 கிராம் தங்க கம்பியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
தங்கம் யாருக்கு கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று இஸ்மாயிலிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசின் உள் பகுதியில் உள்ள விளிம்பில் தங்கத்தை கம்பியாக வளைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து 400 கிராம் தங்க கம்பியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
தங்கம் யாருக்கு கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று இஸ்மாயிலிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
Next Story






