என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் டிராபிக் ராமசாமியுடன் அ.தி.மு.க.வினர் மோதல்
Byமாலை மலர்7 July 2018 10:04 AM GMT (Updated: 7 July 2018 10:04 AM GMT)
மதுரையில் இன்று டிராபிக் ராமசாமியுடன், அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:
மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.
உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.
உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X