search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை அருகே இரட்டை கொலை- மதுரை கோர்ட்டில் 5 பேர் சரண்
    X

    மானாமதுரை அருகே இரட்டை கொலை- மதுரை கோர்ட்டில் 5 பேர் சரண்

    இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மதுரை கோர்ட்டில் 5 பேர் சரணடைந்தனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

    இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews
    Next Story
    ×