என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறவழியில் திரண்டு வந்த‌வர்களை போலீசார் சுட்டுக்கொன்றது கண்டிக்கத்தக்கது - வைகோ
    X

    அறவழியில் திரண்டு வந்த‌வர்களை போலீசார் சுட்டுக்கொன்றது கண்டிக்கத்தக்கது - வைகோ

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் சுட்டுக்கொன்றது கண்டிக்கத்தக்கது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #SterliteProtest #Vaiko
    தூத்துக்குடி:

    துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டு கொன்றுள்ளார்கள். 50 ஆயிரம் மக்கள் எந்த ஆயுதமும் இன்றி அறவழியில் திரண்டு வந்தார்கள்.

    அவர்களை வேன்களில் ஏறி நின்றும், கட்டிடங்களில் மறைந்து நின்றும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளார்கள். சீருடை அணியாத போலீசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 22 வருடமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மகராஷ்டிராவில் 3 நாள் போராட்டத்திலேயே இந்த கம்பெனியை அரசு இழுத்து மூடியது. அங்கு எந்த போலீஸ் நடவடிக்கையும் இல்லை.

    இங்குதான் போலீசாரால் வன்முறை நடத்தப்பட்டுள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ளார். வேலைக்கு சென்றவர் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது. துப்பாக்கி சூடு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு இழப்பீடு தீர்வாகாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து கண்ணீர் விட்டு அழுது ஆறுதல் கூறினார். அப்போது வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து நடந்த விவரங்களையும் கேட்டறிந்தார். அங்கு நின்ற டாக்டர்களிடம் தரமான சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.  #SterliteProtest #Vaiko

    Next Story
    ×