search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- என்.எல்.சி. அதிகாரி பலி
    X

    நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- என்.எல்.சி. அதிகாரி பலி

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்.எல்.சி. அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 69). ஓய்வு பெற்ற என்.எல்.சி. அதிகாரி.

    நேற்று இரவு 9 மணி அளவில் வேணுகோபால் அருகில் உள்ள கடைக்கு அரிசி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது பண்ருட்டியில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வேணுகோபால் கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் வேணுகோபாலின் மகள் விஜயகுமாரி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    Next Story
    ×