என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்: சீமான்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்: சீமான்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பஸ் கட்டணம் சுமார் 100 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2 காசு, 5 காசு என குறைத்து இருப்பது, பொதுமக்களை கேவலப்படுத்துவது போல உள்ளது. இதை கட்டண குறைப்பு என்று சொல்வதே கேவலம்.

    நாங்கள் ஆட்சி மாற்றம் மற்றும் ஆள்மாற்றத்துக்கு வந்தவர்கள் இல்லை. அரசியல் மாற்றம், அமைப்பு மாற்றம் ஏற்படுத்துவோம் என கூறி 7 ஆண்டுகளாக பணி செய்து வருகிறோம். தற்போது நடிகர் ரஜினிகாந்த் அதை சொல்கிறார் என்றால் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் என கூறி உள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும். அதற்காக ஜீயர் மன்னிப்பு கேட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நான் வரவேற்கிறேன். உளமார வருத்தம் தெரிவித்து விட்டால் அதை ஏற்க வேண்டும்.

    நான் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என பேசியபோது இனவெறி என்றனர். தற்போது அதைத்தான் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். அவர் புகழ்பெற்ற நடிகராக இருப்பதால் அமைதியாக உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு இன்னும் 7 ஆண்டுகள் பணி உள்ளது. அதன் பிறகு அவருடன் இணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×