என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது: போலீசார் விசாரணை
சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பொன்னம்பல நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், தனது வீட்டிலேயே மருந்து கடை நடத்தி வந்தார். இவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக சென்னை மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
இதன்அடிப்படையில் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழரசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சரவணனின் மருந்துக் கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் அவர் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தது தெரிந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அவரை பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார். மேலும் மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம் பொன்னம்பல நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், தனது வீட்டிலேயே மருந்து கடை நடத்தி வந்தார். இவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக சென்னை மருத்துவ இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
இதன்அடிப்படையில் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழரசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சரவணனின் மருந்துக் கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் அவர் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்தது தெரிந்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் அவரை பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தார். மேலும் மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story