என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்த கணவர் துரைராஜ் உடலுடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள்.
இறந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய பணமின்றி தவித்த மனைவி
ஜெயங்கொண்டம் அருகே வறுமையின் காரணமாக இறந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய பணமின்றி அரசு மருத்துவமனையில் மனைவி, குழந்தைகள் பரிதவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). இவர் கூலி வேலைக்கு சென்ற போது வேற்று ஜாதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் துரைராஜ் (50) என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரண்டு தரப்பினரின் உறவினர்களும் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். துரை ராஜ், ராணி இருவரும் சிந்தாமணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு தமிழரசன், (13) என்ற மகனும், தமிழரசி (12), தமிழ்ச்செல்வி (9) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் அதே பகுதியில் தா.பழூர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் துரைராஜூக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் துரைராஜை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று மாலை இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய வசதி இல்லாத ராணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் உடலை வைத்துக்கொண்டு அழுதனர். நல்லடக்கம் செய்ய பணம் இல்லாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே பரிதவித்தனர்.
சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இவர்களின் நிலைகளை கண்டு மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்களால் இயன்ற பணத்தினை நான்கு பேருக்கும் இரவு உணவிற்காக கொடுத்து உதவினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன் மற்றும் வி.ஏ.ஓ. பொய்யாமொழி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்து போன துரைராஜ் உடலை பார்வையிட்டு நாளை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (40). இவர் கூலி வேலைக்கு சென்ற போது வேற்று ஜாதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் துரைராஜ் (50) என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் இரண்டு தரப்பினரின் உறவினர்களும் அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். துரை ராஜ், ராணி இருவரும் சிந்தாமணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு தமிழரசன், (13) என்ற மகனும், தமிழரசி (12), தமிழ்ச்செல்வி (9) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்கள் அதே பகுதியில் தா.பழூர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் துரைராஜூக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் துரைராஜை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று மாலை இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய வசதி இல்லாத ராணி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் உடலை வைத்துக்கொண்டு அழுதனர். நல்லடக்கம் செய்ய பணம் இல்லாததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே பரிதவித்தனர்.
சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இவர்களின் நிலைகளை கண்டு மருத்துவமனையில் உள்ள பார்வையாளர்கள் தங்களால் இயன்ற பணத்தினை நான்கு பேருக்கும் இரவு உணவிற்காக கொடுத்து உதவினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன் மற்றும் வி.ஏ.ஓ. பொய்யாமொழி ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்து போன துரைராஜ் உடலை பார்வையிட்டு நாளை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Next Story






