என் மலர்
செய்திகள்

டெங்கு காய்ச்சலுக்கு பலியான பெண் மாதேஸ்வரி.
கவுந்தப்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
கவுந்தப்பாடி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி அப்பநாய்க்கனூர் கிராமத்தில் வசிப்பவர் இளையராஜா தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 21) கூலி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு மூன்று வயதில் தீபக் என்ற ஆண்குழந்தை உள்ளது.
கடந்த 31ம்தேதி திங்கட்கிழமை மாதேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ரத்தபரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் என மருத்துவர் கூறினார்.
மூன்று நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மாதேஸ்வரிக்கு மீண்டும் காய்ச்சல் திரும்பியது முன்பு சிகிச்சை பெற்ற மருத்துவரிடம் சென்றார்.
பிறகு சிகிச்சை பலனின்றி மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெள்ளி, சனி, இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாதேஸ்வரி உடல்நிலை மேலும் மோசமானதால் கோவை தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று காலை மருத்துவமனையில் இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு தினமும் பலர் பலியாகி வருகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அப்பநாய்க்கனூர் கிராமத்தில் துரைசாமி(35), கார்த்தி(30), மாரநாய்க்கர் (40), வெங்கிடுசாமி(40), தட்டாரபாளையம் கிராமத்தில் சதீஸ்(18), செந்தில் (21), மாரநாய்க்கனூர் கிராமத்தில் கவுரி(25), மாருசாமி(20), அர்ஜீனன்(40), ரோகித் (8), கனித்ரா(3) ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கவுந்தப்பாடி மற்றும் கோபி, ஈரோடு, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சுகாதார துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொசுக்களை அழித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி அப்பநாய்க்கனூர் கிராமத்தில் வசிப்பவர் இளையராஜா தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 21) கூலி நெசவுத்தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு மூன்று வயதில் தீபக் என்ற ஆண்குழந்தை உள்ளது.
கடந்த 31ம்தேதி திங்கட்கிழமை மாதேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கவுந்தப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ரத்தபரிசோதனை செய்ததில் வைரஸ் காய்ச்சல் என மருத்துவர் கூறினார்.
மூன்று நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மாதேஸ்வரிக்கு மீண்டும் காய்ச்சல் திரும்பியது முன்பு சிகிச்சை பெற்ற மருத்துவரிடம் சென்றார்.
பிறகு சிகிச்சை பலனின்றி மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெள்ளி, சனி, இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாதேஸ்வரி உடல்நிலை மேலும் மோசமானதால் கோவை தனியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று காலை மருத்துவமனையில் இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு தினமும் பலர் பலியாகி வருகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அப்பநாய்க்கனூர் கிராமத்தில் துரைசாமி(35), கார்த்தி(30), மாரநாய்க்கர் (40), வெங்கிடுசாமி(40), தட்டாரபாளையம் கிராமத்தில் சதீஸ்(18), செந்தில் (21), மாரநாய்க்கனூர் கிராமத்தில் கவுரி(25), மாருசாமி(20), அர்ஜீனன்(40), ரோகித் (8), கனித்ரா(3) ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கவுந்தப்பாடி மற்றும் கோபி, ஈரோடு, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சுகாதார துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொசுக்களை அழித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






