என் மலர்
செய்திகள்

தினகரன் பற்றி அவதூறு: அமைச்சர்கள் மீது தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பாய்ச்சல்
துணை பொதுச்செயலாளராக அன்று டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டபோது வாழ்த்து கூறிய அமைச்சர்கள் இன்று அவரை எதிர்ப்பதும் வசை பாடுவதும் நியாயமா? என பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சாலம் கூறியுள்ளார்.
பெருந்துறை:
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று மதியம் பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆட்சியை சிறப்பாக நடக்கவும் கட்சியை மேலும் பலப்படுத்தவே டி.டி.வி.தினகரன் தற்போது கட்சி பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
இதன் மூலம் அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த புதிய பொறுப்புகள் மூலம் தொண்டர்களும் இப்போது உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ஆனால் இதற்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தினகரன் மீது வசை பாடுகிறார்கள். அன்று துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டபோது வாழ்த்து கூறிய அமைச்சர்கள் இன்று அவரை எதிர்ப்பதும் வசை பாடுவதும் நியாயமா? அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடா?
கட்சியிலும் ஆட்சியிலும் எவ்வளவோ பணிகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தினகரன் மீது மட்டும் குறை கூறி அதில் மட்டும் கவனம் செலுத்தி வருவது தேவையற்றது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் மூத்த அமைச்சர்களால் தீர்வு காண முடியவில்லை. இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை முதலில் அவர்கள் தீர்க்கட்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறினார்.
பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று மதியம் பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆட்சியை சிறப்பாக நடக்கவும் கட்சியை மேலும் பலப்படுத்தவே டி.டி.வி.தினகரன் தற்போது கட்சி பொறுப்புகளை வழங்கி வருகிறார்.
இதன் மூலம் அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த புதிய பொறுப்புகள் மூலம் தொண்டர்களும் இப்போது உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ஆனால் இதற்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தினகரன் மீது வசை பாடுகிறார்கள். அன்று துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டபோது வாழ்த்து கூறிய அமைச்சர்கள் இன்று அவரை எதிர்ப்பதும் வசை பாடுவதும் நியாயமா? அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடா?
கட்சியிலும் ஆட்சியிலும் எவ்வளவோ பணிகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தினகரன் மீது மட்டும் குறை கூறி அதில் மட்டும் கவனம் செலுத்தி வருவது தேவையற்றது.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் மூத்த அமைச்சர்களால் தீர்வு காண முடியவில்லை. இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை முதலில் அவர்கள் தீர்க்கட்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறினார்.
Next Story






