search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thoppu venkatachalam mla"

    அ.தி.மு.க. அமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது யாருடைய மனதையும் புண் படுத்தாமல் நாகரீகத்துடன் பேச வேண்டும் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் பேசினார். #thoppuvenkatachalammla

    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டர்களின் மனதில் மட்டுமல்ல தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து வருபவர் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆவார்.

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றை சொல்லில் சொல்ல விரும்புகிறேன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.பி.க்கள் அனைவரும் மன வருத்தத்தில் உள்ளனர்.

    தங்களின் கருத்துகளை கேட்க யாரும் முன் வரவில்லையே என்ற மன வேதனையில் உள்ளனர்.

    மன வேதனையில் உள்ள அவர்களை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். மன வருத்தத்தை போக்க வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தலைமை மதிப்பளிக்க வேண்டும்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை வரவழைத்து முதல்வரும், துணை முதல்வரும் பேச வேண்டும்.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போது தொண்டர்கள் மனது நோகும்படி பேசி வருகிறார்கள். யாருடைய மனதையும் புண் படுத்தாமல் அமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச வேண்டும்.

    மறைந்த நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசும் போது கூட யார் மனதையும் புண்படாமல் கொள்கையை மனதில் வைத்து பேசுவார். அப்படி யாரும் பேச கூடாது என்று வலியுறுத்தி வந்தார்.

    அதன் படி இப்போது கூட்டத்தில் பேசும் அமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும். நாகரீகத்துடன் பேச வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.

    அமைச்சர்கள் புள்ளி விவரத்துடன் பேசும் காலம் போய் புல்லரிக்கும் வகையில் பேசும் நிலை வந்து விட்டது. அமைச்சர்கள் பேச்சுக்கும், கருணாஸ் பேச்சுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது. ஜெயலலிதாவின் ஒழுக்க சிந்தனையுடன் அமைச்சர்கள் பேச கற்று கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேசினார். #thoppuvenkatachalammla

    ×