search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகரிப்பு
    X

    ஒருநாள் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 56 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது.
    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக, பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்னே சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. பூண்டி, புழல், செம்பரப்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் குட்டை போல் காட்சியளிக்கிறது.

    இந்த 4 ஏரிகளையும் சேர்த்து தற்போது வெறும் 79 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 3988 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது.

    ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

    செம்பரப்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 56 மில்லியன் கனஅடியாக உயர்ந்தது.

    கடந்த 9-ந்தேதி ஏரியில் 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. ஒருநாள் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் 9 மில்லியன் கனஅடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×