என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிணமாக கிடக்கும் கோதண்டன், வரலட்சுமி.
    X
    பிணமாக கிடக்கும் கோதண்டன், வரலட்சுமி.

    பெங்களூரு பெண் என்ஜினீயர், அண்ணனுடன் வெட்டிக்கொலை: மாமனார் கைது

    பிரிந்து வாழும் கணவருடன் சேர்ந்து வாழ சென்னை வந்த பெங்களூரு பெண் என்ஜினீயர், அண்ணனுடன் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மாமனார் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகரை சேர்ந்த கோசலன் (வயது 65). ஆட்டோ டிரைவர். இவரின் மகன் வினாயகமூர்த்தி (28). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வரலட்சுமிக்கும் (26) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    வினாயகமூர்த்திக்கு விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை மறைத்து திருமணம் செய்ததால் வாழ பிடிக்காமல் 3 மாதங்களில் வரலட்சுமி பெங்களூருவில் உள்ள தன் அக்கா, அண்ணன் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வரலட்சுமி விரும்பினார். இதையடுத்து தன் அண்ணனான கம்ப்யூட்டர் என்ஜினீயர் கோதண்டன் (30), அக்கா பவானி (33) மற்றும் தன் தோழி மாலதி ஆகியோருடன் நேற்று மாலை பெங்களூருவில் இருந்து சென்னையில் உள்ள கணவர் வீட்டுக்கு வரலட்சுமி வந்தார்.

    அப்போது வீட்டில் கோசலன் இருந்தார். வரலட்சுமி, வினாயகமூர்த்தியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கோதண்டன் கூறினார். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோதண்டன், கோசலனை அடித்தார். உடனே கோசலன் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து அங்கிருந்தவர்களை வெட்ட விரட்டினார்.

    இதனால் வரலட்சுமி உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து ஓட முயன்றனர். எனினும் கோதண்டனை சரமாரியாக கோசலன் வெட்டினார். இதில் கோதண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆத்திரம் அடங்காமல் மருமகள் வரலட்சுமியையும் கோசலன் விரட்டி சென்று வெட்டினார்.

    அப்போது பவானி அவரை தடுக்க முயன்று தள்ளிவிட்டார். இதில் கோசலன் காயம் அடைந்தார். எனினும் பவானி, வரலட்சுமியை கோசலன் அரிவாளால் வெட்டினார். இதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பவானி போராடி கொண்டு இருந்தார். தோழி மாலதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தந்தனர். தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அன்பு, பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாண், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கோதண்டன், வரலட்சுமி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு போராடிய பவானி, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோசலனை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×