என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் 3 மாதங்களுக்கு பிறகு நளினி- முருகன் சந்திப்பு
Byமாலை மலர்1 July 2017 6:25 AM GMT (Updated: 1 July 2017 6:25 AM GMT)
வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை 3 மாதங்களுக்கு பிறகு, இன்று காலை 7.50 மணியளவில் முருகன் சென்று சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி முருகன், வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியை முருகன் சந்தித்து அரைமணி நேரம் பேசி வந்தார். இந்த நிலையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் அறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் சிக்கியது.
இதையடுத்து, மனைவி நளினி உள்பட பார்வையாளர்களை சந்திக்க முருகனுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்தது. செல்போன் பறிமுதல் வழக்கு விசாரணை, வேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முருகனை சந்திக்க அவரது தாயார் சோமணி வெற்றிவேல் பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் சிறைத்துறை விதித்த 3 மாத தடை உத்தரவு நீங்கியது.
இதையடுத்து, பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை 3 மாதங்களுக்கு பிறகு, இன்று காலை 7.50 மணியளவில் முருகன் சென்று சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.
பின்னர், 8.20 மணிக்கு மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு முருகன் அடைக்கப்பட்டார். வேலூர் டவுன் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையில் போலீசார் அழைத்து சென்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி முருகன், வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியை முருகன் சந்தித்து அரைமணி நேரம் பேசி வந்தார். இந்த நிலையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் அறையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போன் சிக்கியது.
இதையடுத்து, மனைவி நளினி உள்பட பார்வையாளர்களை சந்திக்க முருகனுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்தது. செல்போன் பறிமுதல் வழக்கு விசாரணை, வேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முருகனை சந்திக்க அவரது தாயார் சோமணி வெற்றிவேல் பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் சிறைத்துறை விதித்த 3 மாத தடை உத்தரவு நீங்கியது.
இதையடுத்து, பெண்கள் ஜெயிலில் உள்ள மனைவி நளினியை 3 மாதங்களுக்கு பிறகு, இன்று காலை 7.50 மணியளவில் முருகன் சென்று சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.
பின்னர், 8.20 மணிக்கு மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு முருகன் அடைக்கப்பட்டார். வேலூர் டவுன் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையில் போலீசார் அழைத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X