என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு.
    X
    கொள்ளை நடந்த வீடு.

    கோபியில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

    கோபியில் தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் 32 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அம்பிகை நகரை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி நம்பியாம் பாளையத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் தனது நிறுவனத்தில் இருந்தார். மனைவி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் மேல்மாடி வழியாக இறங்கி வீட்டுக்குள் புகுந்தனர்.

    பிறகு அந்த ஆசாமி வீட்டின் உள்ளே இருந்த பீரோவை திறந்தான். உள்ளே இருந்த லாக்கரில் வளையல், தாலி செயின், நெக்லஸ், செயின், தோடு, பிரஸ்லெட் என மொத்தம் 32 பவுன் நகைகள் இருந்தது.

    அந்த லாக்கரை அப்படியே கொள்ளையன் தூக்கி கொண்டு தப்பி ஓடி விட்டான்.

    இந்த துணிகர சம்பவம் குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.

    இந்த துணிகர நகை கொள்ளை சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×