என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் இல்லாத தாலுகா: செந்துறை மக்களுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு
Byமாலை மலர்25 May 2017 9:22 AM GMT (Updated: 25 May 2017 9:22 AM GMT)
தமிழகத்தில் டாஸ்மாக் அல்லாத தாலுக்காவாக செந்துறை தாலுகாவை மாற்றி அமைத்து பெருமைப்பட செய்திருக்கும் செந்துறை மக்களுக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார்.
அரியலூர்:
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த தாலுகாவிற்கு உட்பட்ட 8 டாஸ்மாக் கடைகளை தொடர் போராட்டங்களை நடத்தி மூடியுள்ளனர். மதுவிற்கு எதிராக செந்துறை பெண்கள் அதிகமாக தன்னெழுச்சியாக பங்கேற்று ஆர்ப்பரித்து இந்த போராட்டங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் அல்லாத தாலுக்காவாக செந்துறை தாலுகாவை மாற்றி அமைத்து பெருமைப்பட செய்திருக்கும் செந்துறை மக்களுக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறப்போராட்டங்களை முன்னேடுத்துச் சென்று தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். போராட்டங்களுக்கு வழி வகுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த தாலுகாவிற்கு உட்பட்ட 8 டாஸ்மாக் கடைகளை தொடர் போராட்டங்களை நடத்தி மூடியுள்ளனர். மதுவிற்கு எதிராக செந்துறை பெண்கள் அதிகமாக தன்னெழுச்சியாக பங்கேற்று ஆர்ப்பரித்து இந்த போராட்டங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் அல்லாத தாலுக்காவாக செந்துறை தாலுகாவை மாற்றி அமைத்து பெருமைப்பட செய்திருக்கும் செந்துறை மக்களுக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறப்போராட்டங்களை முன்னேடுத்துச் சென்று தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். போராட்டங்களுக்கு வழி வகுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X