என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: அரையிறுதிக்குள் நுழைந்தது உத்தரகாண்ட்
- ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
- முதல் காலிறுதி போட்டியில் உத்தரகாண்ட் அணி வெற்றி பெற்றது.
ஜாம்ஷெட்பூர்:
ஜாம்ஷெட்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆதித்யா சிங் 83 ரன்னிலும், கேப்டன் விராட் சிங் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
உத்தராண்ட் சார்பில் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட்டும், ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய உத்தரகாண்ட் அணி 371 ரன்கள் குவித்தது. ஜெகதீஷ் ச்சித் 70 ரன்னும், குனால் சண்டேலா 68 ரன்னும், அவ்னீஷ் சுதா 64 ரன்னும், அபய் நேகி 47 ரன்னும் எடுத்தனர்.
136 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போல் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் விராட் சிங் 55 ரன்னும், குமார் குஷாரா 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரகாண்ட் அணி அரையிறுதிக்கும் தகௌதி பெற்றது.
உத்தரகாண்ட் சார்பில் மயங்க் மிஸ்ரா 5 விக்கெட்டும், அபய் நேகி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்






