என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கம்- இந்திய அணியின் புதிய கேப்டன் துணை கேப்டன் அறிவிப்பு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.
- இந்திய அணியின் கீப்பராக கேஎல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இந்த ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. மேலும் கீப்பராக கேஎல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் இடம் பெற்றுள்ளார். இந்த அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-
கில் (கேப்டன்), ரோகித், கோலி, ஐயர், அக்சர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஜூரல், ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, சுந்தர், குல்தீப், ஹர்ஷித், சிராஜ், அர்ஷ்தீப் மற்றும் கிருஷ்ணா.






