என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    முக்கிய நேரத்தில் எனது விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு காரணம்: சஞ்சு சாம்சன்
    X

    முக்கிய நேரத்தில் எனது விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு காரணம்: சஞ்சு சாம்சன்

    • பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம்.
    • பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம் என தெரிவித்தார்.

    அகமதாபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    பவுலிங்கின் போது நாங்கள் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கூடுதலாக விட்டுக் கொடுத்துவிட்டோம். அதேபோல் பேட்டிங்கின் போது முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தோம்.

    குறிப்பாக ஹெட்மயர் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளியபோது என் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டேன். அங்குதான் ஆட்டம் எங்களின் கைகளில் இருந்து நழுவியது.

    பவுலிங்கில் ஆர்ச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது. சுப்மன் கில் விக்கெட்டை திட்டமிட்டபடி எடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் திட்டமிட்டது வேறு, ஆனால் செயல்படுத்திய திட்டம் வேறு. அடுத்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாளை பார்க்க வேண்டும்.

    சில நேரங்களில் டிபென்சில் மட்டுமின்றி, சேசிங்கில் போட்டிகளை வெல்ல வேண்டும் என நினைக்கிறேன். டாஸ் முடிவு குறித்து போட்டிக்கு பின் மாற்றி செய்திருக்கலாமா என்று தோன்றுவது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு அணியாக டிபென்சில் மட்டுமல்லாமல் சேசிங்கிலும் வெல்ல முயற்சித்தோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×