என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு
- புள்ளிகள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 30ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமாத், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான்.
இம்பேக்ட் பிளேயர் ஆப்சன்:- ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
ரச்சின் ரவீந்திரா, ஷெய்க் ரஷீத், ராகுல் திரிபாதி, ஜடேஜா, விஜய் சங்கர், ஓவர்டன், எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.
இம்பேக்ட் பிளேயர் ஆப்சன்:- ஷிவம் துபே, நகர்கோட்டி, சாம் கர்ரன், தீபக் ஹூடா, ராமகிருஷ்ணா கோஷ்.






