என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

    • ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
    • ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

    இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.

    Live Updates

    • 25 Nov 2024 4:03 PM IST

      ரியான் ரிக்கிள்டன்-ஐ மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 4:02 PM IST

      2ம் நாள் ஏலத்தின் செட் 15-இல் சாய் ஹோப் UNSOLD

    • 25 Nov 2024 4:01 PM IST

      நிதிஷ் ராணாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 3:57 PM IST

      இந்திய வீரர் க்ரூணல் பாண்டியாவை ரூ. 5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி.

    • 25 Nov 2024 3:52 PM IST

      டேரில் மிட்செல் இன்றைய ஏலத்தில் UNSOLD ஆனார்.

    • 25 Nov 2024 3:52 PM IST

      மார்கோ யான்சென்-ஐ ரூ. 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

    • 25 Nov 2024 3:47 PM IST

      சாம் கர்ரன்-ஐ ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    • 25 Nov 2024 3:46 PM IST

       

      தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    • 25 Nov 2024 3:43 PM IST

      இந்திய அணி வீரரான ஷர்துல் தாக்குர் இன்றைய ஏலத்தில் UNSOLD

    • 25 Nov 2024 3:42 PM IST

      மயங்க் அகர்வால்-ஐ இன்றைய ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை

    Next Story
    ×