என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்... புதிய வீரர் குறித்து வெளியான தகவல்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
- கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
சென்னை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் கவுகாத்தியில் நடைபெறும் 2-வது டெஸ்டில் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமே. கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
இந்நிலையில் அவருக்கான இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது மிக ஆவலை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணியின் பயிற்சியின் போது படிக்கல், சாய் சுதர்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






