என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
ஒருநாள் போட்டி தரவரிசை - கோலியை நெருங்கும் ரோகித்சர்மா
Byமாலை மலர்10 Feb 2022 5:23 AM GMT (Updated: 10 Feb 2022 5:23 AM GMT)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டியின் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருந்தது.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்கியுள்ளார். அவரை விட 21 ரேங்கிங் புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ஆடினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவரது ஆட்டம் மோசமாக இருந்தது. கடைசி போட்டியில் திறமையை வெளிப்படுத்தினால் அவரால் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். அதே நேரத்தில் விராட் கோலி முதல் 2 போட்டியிலும் சரியாக ஆடவில்லை. கடைசி போட்டியில் ரன்களை குவித்தால் அவர் 2-வது வரிசையை தக்கவைத்துக் கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X