என் மலர்
விளையாட்டு

ரிக்கி பாண்டிங்
ஜோ ரூட்டுக்கு பதிலாக இவரை இங்கிலாந்து கேப்டனாக நியமிக்க வேண்டும் - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றால், தொடர்ந்து 10 டெஸ்டில் தோற்ற அணி என்ற மோசமான சாதனைக்கு அந்த அணி ஆளாகிவிடும் வாய்ப்புள்ளது.
சிட்னி:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஆஷஸ் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில், இறுதி நாளான இன்று இங்கிலாந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்குகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டனாக பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த சில போட்டிகளில் பெற்ற தோல்வியின் எதிரொலியால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இந்த நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...புரோ கபடி லீக் - மும்பை, பாட்னா அணிகள் வெற்றி
Next Story






