என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'இந்தியாவுக்காக விளையாடப்போகும் மிக முக்கியமான வீரர் அவர்'- புகழாரம் சூட்டிய விராட் கோலி
Byமாலை மலர்21 Sep 2021 11:15 AM GMT (Updated: 21 Sep 2021 11:15 AM GMT)
கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 2021 சீசனின் இரண்டாம் பகுதி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் அபுதாபியில் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் ஆர்.சி.பி படுதோல்வியடைந்தது. கொல்கத்தாவின் மிரட்டலான வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி. அவர் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
போட்டி முடிந்த பின்னர் வருண் குறித்து கோலி, 'அவரின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. நான் சக வீரர்களிடமும் அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது மிக முக்கியமான வீரராக இருக்கப் போகிறார்.
அவரைப் போன்று பல இளம் வீரர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் இந்திய அணி வலுவாக இருக்கும். அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார். அது நல்ல விஷயமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X