என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கோப்பை
    X
    ஐபிஎல் கோப்பை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்- பிசிசிஐ

    கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.

    இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பிசிசிஐ

    இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×