என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் குறித்து கவலைப்படக் கூடாது: கவுதம் கம்பிர்
Byமாலை மலர்16 July 2020 3:38 PM GMT (Updated: 16 July 2020 3:38 PM GMT)
ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் குறித்து கவலைப்படக்கூடாது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. தற்போது ஸ்மித், வார்னர் அணியில் இருப்பதால் சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் குறித்து கவலைப்படக்கூடாது என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அணிக்கு எதிராகவும், எந்த சூழ்நிலையிலும் சவால் கொடுக்கக் கூடியவர்கள். கடந்த முறை வெற்றி பெற்ற அணியோடு நாம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது, போட்டியை நடத்தும் அணிக்கு மிகவும் சவலாக இருப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X