என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏனென்றால் டிராவிட், சச்சின் சார்தான்... இளம் புயல் ஜெய்ஸ்வால் இப்படி கூற காரணம் என்ன?
Byமாலை மலர்18 Feb 2020 1:26 PM GMT (Updated: 18 Feb 2020 1:26 PM GMT)
U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காளேதேசம் வீரர்கள் வார்த்தை போரில் மோதிக் கொண்ட போதிலும் அமைதியாக இருக்க இதுதான் காரணம் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்தே வங்காளதேசம் அணி வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டனர். போட்டி முடிந்த பின்னர் இந்த வார்த்தை போர் கைகலப்பு வரை சென்றது. இதில் சில வீரர்கள் ஐசிசி-யால் எச்சரிக்கப்பட்டனர்.
ஆனால் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை வங்காளதேசம் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் சீண்டினர். ஜெய்ஸ்வால் அதற்கு பதிலடி கொடுக்காமல் பேட்டிங்கில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவர் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் வார்த்தை போரில் ஈடுபடாமல் இருந்ததற்கு ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘இதற்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் சார்தான். அவர்கள் என்னுடைய பேட் மட்டுமே பேச வேண்டும், வாய் பேசக்கூடாது. இந்த ஒரு நினைப்போடுதான் விளையாட வேண்டும் என என்னிடம் கூறியிருந்தனர். நான் அவர்களுடைய ஆலோசனையைத்தான் டாப்பில் வைத்திருக்கிறேன்.
அதனால்தான் இறுதிப் போட்டியில் வங்காளதேச அணி வீரர்களுடன் வார்த்தைப்போரில் ஈடுபடவில்லை. நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்து, ரன்களை உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஒரு விஷயம்தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது’’ என்றார்.
ஆனால் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை வங்காளதேசம் பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் சீண்டினர். ஜெய்ஸ்வால் அதற்கு பதிலடி கொடுக்காமல் பேட்டிங்கில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவர் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் வார்த்தை போரில் ஈடுபடாமல் இருந்ததற்கு ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் ஆலோசனைதான் முக்கிய காரணம் என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘இதற்கு காரணம் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் தெண்டுல்கர் சார்தான். அவர்கள் என்னுடைய பேட் மட்டுமே பேச வேண்டும், வாய் பேசக்கூடாது. இந்த ஒரு நினைப்போடுதான் விளையாட வேண்டும் என என்னிடம் கூறியிருந்தனர். நான் அவர்களுடைய ஆலோசனையைத்தான் டாப்பில் வைத்திருக்கிறேன்.
அதனால்தான் இறுதிப் போட்டியில் வங்காளதேச அணி வீரர்களுடன் வார்த்தைப்போரில் ஈடுபடவில்லை. நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்து, ரன்களை உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். இந்த ஒரு விஷயம்தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X