search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ தலைவர் கங்குலி
    X
    பிசிசிஐ தலைவர் கங்குலி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும்: உறுதிப்படுத்தினார் கங்குலி

    ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும், எந்த மைதானம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா கடந்த சில வருடங்களாக ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியா கடந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது.

    அதன்பின் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற சவுரவ் கங்குலி ‘டே-நைட்’ டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் பயனாக இந்தியா முதல் முறையாக வங்காளதேசம் அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடியது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எங்களுக்கு எதிராகவும் இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் டி20 உலக கோப்பைக்குப்பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் இந்திய அணி ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஆம்.... இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆனால் அடிலெய்டு மைதானமா? பெர்த் மைதானமா? என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.
    Next Story
    ×