என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும்: உறுதிப்படுத்தினார் கங்குலி
Byமாலை மலர்16 Feb 2020 1:03 PM GMT (Updated: 16 Feb 2020 1:03 PM GMT)
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும், எந்த மைதானம் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கடந்த சில வருடங்களாக ‘டே-நைட்’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியா கடந்த முறை ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட மறுத்துவிட்டது.
அதன்பின் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற சவுரவ் கங்குலி ‘டே-நைட்’ டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் பயனாக இந்தியா முதல் முறையாக வங்காளதேசம் அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடியது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எங்களுக்கு எதிராகவும் இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பைக்குப்பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் இந்திய அணி ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஆம்.... இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆனால் அடிலெய்டு மைதானமா? பெர்த் மைதானமா? என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.
அதன்பின் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற சவுரவ் கங்குலி ‘டே-நைட்’ டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் பயனாக இந்தியா முதல் முறையாக வங்காளதேசம் அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடியது.
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எங்களுக்கு எதிராகவும் இந்தியா ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டி20 உலக கோப்பைக்குப்பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும் இந்திய அணி ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஆம்.... இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் ‘டே-நைட்’ டெஸ்டில் விளையாடும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆனால் அடிலெய்டு மைதானமா? பெர்த் மைதானமா? என்பது இன்னும் முடிவாகவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X