என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலியை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் - மல்லையா வேண்டுகோள்
Byமாலை மலர்16 Feb 2020 1:09 AM GMT (Updated: 16 Feb 2020 1:09 AM GMT)
பெங்களூரு அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை விராட் கோலியிடம் விட்டு விடுங்கள் என பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13-வது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய லோகோ புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய லோகோ, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. ஆனால் கோப்பையை வென்று பெங்களூருவுக்கு கொண்டு வாருங்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வந்தவர், விராட் கோலி. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், அபாரமான திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து அவரிடம் விட்டு விடுங்கள். எல்லா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களும் ஐ.பி.எல். கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. கடந்த மூன்று சீசனில் மிகவும் மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த 13-வது ஐ.பி.எல். தொடரிலாவது வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த அணிக்குரிய லோகோ புதிதாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் அணிக்கு ராசியாக அமையும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.
இது குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிய லோகோ, சிங்கம் கர்ஜிப்பது போல் அருமையாக உள்ளது. ஆனால் கோப்பையை வென்று பெங்களூருவுக்கு கொண்டு வாருங்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வந்தவர், விராட் கோலி. அவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும், அபாரமான திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். அணியை வழிநடத்துவதில் அவருக்கான சுதந்திரத்தை கொடுத்து அவரிடம் விட்டு விடுங்கள். எல்லா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்களும் ஐ.பி.எல். கோப்பைக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X