என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்
Byமாலை மலர்17 Jan 2020 10:47 AM GMT (Updated: 17 Jan 2020 10:47 AM GMT)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து எம்எஸ் டோனி நீக்கப்பட்டதால் அவரின் சர்வதேச கிரிக்கெட் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்எஸ் டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.
இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் எம்எஸ் டோனியின் சர்வதேச போட்டி முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் டோனி ஏற்கனவே இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டியை விளையாடி விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பொதுவாக இதன் மூலம் எம்எஸ் டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குப்பின் அவர் மீண்டும் அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும் என நாள் கேள்விபட்டேன். தானாகவே ஏன் அணியில் இடம் பிடிக்கவில்லை என்பதற்கான மனநிலையை அவர் ஏற்கனவே தயார் படுத்திக் கொண்டார்.’’ என்றார்.
இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடாமல் உள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆறு மாதமாக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் எம்எஸ் டோனியின் சர்வதேச போட்டி முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில் எம்எஸ் டோனி ஏற்கனவே இந்தியாவுக்கான அவரது கடைசி போட்டியை விளையாடி விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘பொதுவாக இதன் மூலம் எம்எஸ் டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. உலக கோப்பை அரையிறுதி போட்டிக்குப்பின் அவர் மீண்டும் அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். உலக கோப்பைதான் இந்தியாவுக்காக அவர் விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும் என நாள் கேள்விபட்டேன். தானாகவே ஏன் அணியில் இடம் பிடிக்கவில்லை என்பதற்கான மனநிலையை அவர் ஏற்கனவே தயார் படுத்திக் கொண்டார்.’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X