என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஞ்சி டிராபி 5வது சுற்று - முதல் நாள் முடிவில் மும்பை அணி 284/6
Byமாலை மலர்11 Jan 2020 1:12 PM GMT (Updated: 11 Jan 2020 1:12 PM GMT)
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் 5வது சுற்றில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் முதல் நாள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் ஐந்தாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் ஜெய் கோகுல் பிஸ்டா, பூபென் லால்வாணி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிஸ்டா 41 ரன்னிலும், லால்வாணி 21 ரன்னிலும், ஹர்திக் டமோரே 21 ரன்னிலும் அவுட்டாகினர்.
மும்பை அணியின் ஷாம்ஸ் முலானி, ஆதித்யா டாரே ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். முலானி 87 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் மும்பை அணி 89.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. ஆதித்யா டாரே 69 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
தமிழ்நாடு சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின், சாய் கிஷோர் ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X