என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக வேண்டும்: மார்னஸ் லாபஸ்சாக்னே சொல்கிறார்
Byமாலை மலர்10 Jan 2020 11:41 AM GMT (Updated: 10 Jan 2020 11:41 AM GMT)
இந்திய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி, ஸ்மித் போன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்க ஆசைப்படுகிறேன் என லாபஸ்சாக்னே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் புது நட்சத்திர வீரராக உருவாகியிருப்பவர் மார்னஸ் லாபஸ்சாக்னே. கடைசி ஐந்து டெஸ்டில் ஒரு இரட்டை சதத்துடன் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ரன்மெஷின் என்று அழைக்கப்படுகிறார். விரைவாக 1000 ரன்களை எட்டி டான் பிராட்மேன் சாதனையை முறியடித்துள்ளார். அத்துடன் 14 டெஸ்ட் போட்டியில் 1459 ரன்கள் குவித்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரிலும் ஃபார்ம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள லாபஸ்சாக்னே, இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக ஆசை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘நீங்கள் பார்க்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை போன்று ஆக விரும்புகிறேன். அவர்கள் நீண்ட காலமாக, அதாவது ஐந்து ஆறு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமல்ல. மூன்று வகை கிரிக்கெட்டிலும்.
இந்த கோடைக்காலத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்பிடுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை நான் தொடர்ந்தால், எனக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆக இருப்பது உண்மையிலேயே ஆர்வமிக்க சவால். இந்தியா மிகவும் கடினமான கண்டிசன். அவர்கள் மிகவும் வலிமையான அணி. சவாலை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு, அதிக அளவு எதிர்பார்ப்பு இல்லாமல், பந்துக்கு பந்து, போட்டிக்கு போட்டி என செல்ல வேண்டும்.
இந்தியாவில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் போட்டியின் மிகப்பெரிய பகுதி. அதனால் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற எனதில் திட்டத்தில் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரிலும் ஃபார்ம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள லாபஸ்சாக்னே, இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விராட் கோலி, ஸ்மித் போன்று ஆக ஆசை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்னஸ் லாபஸ்சாக்னே கூறுகையில் ‘‘நீங்கள் பார்க்கும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரை போன்று ஆக விரும்புகிறேன். அவர்கள் நீண்ட காலமாக, அதாவது ஐந்து ஆறு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் மட்டுமல்ல. மூன்று வகை கிரிக்கெட்டிலும்.
இந்த கோடைக்காலத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால் நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்பிடுத்துவதுதான் மிகப்பெரிய சவால். அதை நான் தொடர்ந்தால், எனக்கு சவால்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆக இருப்பது உண்மையிலேயே ஆர்வமிக்க சவால். இந்தியா மிகவும் கடினமான கண்டிசன். அவர்கள் மிகவும் வலிமையான அணி. சவாலை மகிழ்ச்சியாக எதிர்கொண்டு, அதிக அளவு எதிர்பார்ப்பு இல்லாமல், பந்துக்கு பந்து, போட்டிக்கு போட்டி என செல்ல வேண்டும்.
இந்தியாவில் விளையாடும்போது சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுகிறீர்கள் என்பதுதான் போட்டியின் மிகப்பெரிய பகுதி. அதனால் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்ற எனதில் திட்டத்தில் தெளிவாக இருக்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X