search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, எம்எஸ் டோனி, சவுரவ் கங்குலி
    X
    விராட் கோலி, எம்எஸ் டோனி, சவுரவ் கங்குலி

    எம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி

    எம்எஸ் டோனியின் எதிர்காலம் குறித்து தேவைப்படும்போது பிசிசிஐ தலைவர் கங்குலி என்னிடம் பேசுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் ஓய்வில் இருக்கிறார். இதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா தொடர்களில் அவர் விளையாடவில்லை.

    அடுத்த மாதம் இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடரிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எம்எஸ் டோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவிடம் பேச விரும்புகிறேன் என்று பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் எம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி ஏதாவது பேசினாரா? என்று விராட் கோலியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விராட் கோலி பதிலளிக்கையில் ‘‘பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளேன். அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான விஷயம். இதுவரை அவர் எம்எஸ் டோனி விவகாரம் குறித்து என்னிடம் பேசவில்லை.

    அவருக்கு தேவை ஏற்படும்போது என்னை தொடர்பு கொண்டு பேசுவார். அவர் என்னிடம் பேச விரும்பும்போது, நான் அவரை சந்தித்து பேசுவேன்’’ என்றார்.
    Next Story
    ×