என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி - தொடரை கைப்பற்றியது
Byமாலை மலர்3 Oct 2019 5:42 AM GMT (Updated: 3 Oct 2019 5:42 AM GMT)
இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
கராச்சி:
பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் 67 ரன்னில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. தொடக்க வீரர் குணதிலகா சதம் அடித்தார். அவர் 134 பந்தில் 133 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ஷனகா 24 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
முகமது அமீர் 3 விக்கெட்டும், உஸ்மான் ஹன்வாரி, வகாப் ரியாஸ், சதாப்கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பகர்ஜமான் 76 ரன்னும், ஆபித் அலி 67 பந்தில் 74 ரன்னும் (10 பவுண்டரி), ஹாரிஸ் சோகையல் 56 ரன்னும் எடுத்தனர். பிரதிப் 2 விக்கெட்டும், டி.சில்வா, ஜெயசூர்யா தலா 1 விக்கெட் டும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 5-ந்தேதி லாகூரில் நடக்கிறது.
பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.
மூன்று ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் 67 ரன்னில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. தொடக்க வீரர் குணதிலகா சதம் அடித்தார். அவர் 134 பந்தில் 133 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ஷனகா 24 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
முகமது அமீர் 3 விக்கெட்டும், உஸ்மான் ஹன்வாரி, வகாப் ரியாஸ், சதாப்கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பகர்ஜமான் 76 ரன்னும், ஆபித் அலி 67 பந்தில் 74 ரன்னும் (10 பவுண்டரி), ஹாரிஸ் சோகையல் 56 ரன்னும் எடுத்தனர். பிரதிப் 2 விக்கெட்டும், டி.சில்வா, ஜெயசூர்யா தலா 1 விக்கெட் டும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 5-ந்தேதி லாகூரில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X