search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அணி வீரர்கள்
    X
    பாகிஸ்தான் அணி வீரர்கள்

    இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி - தொடரை கைப்பற்றியது

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    கராச்சி:

    பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி அங்கு சென்றுள்ளது.

    மூன்று ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் 67 ரன்னில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது. தொடக்க வீரர் குணதிலகா சதம் அடித்தார். அவர் 134 பந்தில் 133 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ‌ஷனகா 24 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    முகமது அமீர் 3 விக்கெட்டும், உஸ்மான் ஹன்வாரி, வகாப் ரியாஸ், சதாப்கான், முகமது நவாஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பகர்ஜமான் 76 ரன்னும், ஆபித் அலி 67 பந்தில் 74 ரன்னும் (10 பவுண்டரி), ஹாரிஸ் சோகையல் 56 ரன்னும் எடுத்தனர். பிரதிப் 2 விக்கெட்டும், டி.சில்வா, ஜெயசூர்யா தலா 1 விக்கெட் டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 5-ந்தேதி லாகூரில் நடக்கிறது.
    Next Story
    ×