search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யுங்கள்- இஷாந்த் சர்மா, அஸ்வினுக்கு பிசிசிஐ வலியுறுத்தல்
    X

    ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யுங்கள்- இஷாந்த் சர்மா, அஸ்வினுக்கு பிசிசிஐ வலியுறுத்தல்

    ரஞ்சி கோப்பை தொடருக்கான 3-வது போட்டியை ஸ்கிப் செய்யுங்கள் என்று இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. #BCCI #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. நாளைமறுநாள் (21-ந்தேதி) டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்ல அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் வீரர்கள் யாரும் எந்தவிதத்திலும் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக இருந்து வருகிறது.

    தற்போது இந்தியாவின் முன்னணி முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கனவே டி20 அணி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், டெஸ்ட் அணி 24-ந்தேதி புறப்படுகிறது. ரஞ்சி போட்டி 23-ந்தேதிதான் முடியும். இதனால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது.

    ஆகவே, டெஸ்ட் போட்டியில் புத்துணர்ச்சியுடன் விளையாட ரஞ்சி போட்டியை ஸ்கிப் செய்யும்படி இஷாந்த் சர்மா, அஸ்வினிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

    முகமது ஷமி மட்டும் ரஞ்சி டிராபியில் பந்து வீச ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் 15 ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் கூடுதல் ஒன்றிரண்டு ஓவர்கள் வீசி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×