search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்
    X

    நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்

    நாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது என, ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் டுவிட் செய்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனின் லீக் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. மும்பை இந்தியன்ஸ் தனது கடைசி லீக்கில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. வாழ்வா? சாவா? போட்டியில் வீறுகொண்டு எழுந்து வந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.



    பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாதது குறித்து ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது ஏமாற்றத்தை அளிக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும், நாம் எதை விரும்புகிறமோ, அதை எப்பொழுதுமே பெற முடியாது. நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால், எதிரணிகள் எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டனர். அடுத்த வரும் இதில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்க்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×