search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் டாடா ஹேரியர் உற்பத்தி துவக்கம்
    X

    இந்தியாவில் டாடா ஹேரியர் உற்பத்தி துவக்கம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது. #Harrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. காரின் முதல் மாடலை உற்பத்தி ஆலையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. கார் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×