என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது.. உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி
    X

    பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது.. உ.பி. மருத்துவமனையில் அதிர்ச்சி

    • அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மருதுவானமையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனருக்கு உதவியாக வந்திருந்த 35 வயது பெண் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு அருகில் மது வாங்கி குடித்து அப்பெண் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை மயக்கம் தெளிந்த அப்பெண், தன்னை தனது மைத்துனர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துப்புரவு ஊழியர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டார்.

    அப்பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று ஜெய்சங்கர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    Next Story
    ×