search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலுக்கு இடையூறு- 4 வயது மகளை கொன்று நாடகமாடிய கல்நெஞ்ச தாய்
    X

    கள்ளக்காதலுக்கு இடையூறு- 4 வயது மகளை கொன்று நாடகமாடிய கல்நெஞ்ச தாய்

    • கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார்.
    • மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22).

    இவர்கள் 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தன்விதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    தற்போது அந்த சிறுமிக்கு 4 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

    கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த நவீன் குமார் (19) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாய் வீட்டிற்கு சென்று நவீன் குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதலுக்கு தன்விதா தடையாக இருப்பதாக இருவரும் எண்ணினர்.

    இதனால் மகளை கொலை செய்ய கல்யாணி முடிவு செய்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமி தன்விதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மகள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் கூறினார்.

    மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொலை செய்ததாக கல்யாணி வாக்குமூலம் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×