என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
லாட்ஜில் அடைத்து வைத்து விடிய விடிய 15 வயது சிறுமி பலாத்காரம்: எலக்ட்ரீசியன் உட்பட 4 பேர் கைது
- இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தாய் கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.
- சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் அப்துல் நதீம் (வயது 23). எலக்ட்ரீசியன். இவரது நண்பரான பைக் மெக்கானிக் நஜ்ருதீன் ( 20).
இருவரும் சேர்ந்து கடந்த 14-ந்தேதி 15 வயது சிறுமியை கடத்திக்கொண்டு நார்சிங்கியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்த லாட்ஜ் மேலாளர் ஜான் சிங்கிடம் தங்குவதற்கு அறை வேண்டும் என கேட்டனர்.
அதற்கு மேலாளர் அறை தர முடியாது என கூறினார். இதனைக் கண்ட லாட்ஜ் உரிமையாளர் விஜய் பணத்திற்கு ஆசைப்பட்டு கொண்டு அறை ஒதுக்க வேண்டும் என மேலாளருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்களுக்கு அறை வழங்கப்பட்டது. அப்துல் நதீம் மற்றும் அவரது நண்பர் நஜ்ருதீன் இருவரும் சிறுமியை இரவு முழுவதும் அறையில் வைத்து பலாத்காரம் செய்தனர்.
இரவு முழுவதும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் இது குறித்து கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் அப்துல் நதீம் நேற்று காலை சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனைக் கண்ட அவரது தந்தை மகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தந்தையிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கோல்கொண்டா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் நதீம், மற்றும் நஜ்ருதீன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் சிறுமியை பலாத்காரம் செய்ய அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் விஜய் மற்றும் மேலாளர் ஜான்சிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்