என் மலர்
இந்தியா

ஆட்சியில் நீடிப்பது மட்டுமே அவர்களின் ஒரே குறிக்கோள்: எதிர்க்கட்சிகளை சாடிய ராஜ்நாத் சிங்
- பீகாரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
- பா.ஜ.க.வின் நோக்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வது என்றார்.
பாட்னா:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பீகார் சென்றடைந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான், ஆட்சியில் நீடிப்பது.
ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடையும் கொள்கைகளை உருவாக்குவது. அனைவருக்கும் சுயமரியாதையுடன் வாழ உரிமை உண்டு என்பதை உறுதி செய்வது. எங்கள் அரசாங்கத்தால் இதுவும் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என தெரிவித்தார்.
Next Story






