என் மலர்
இந்தியா

ராஜஸ்தான்: ரூ.275 கோடி மதிப்பிலான 170 ஏக்கர் அபின் தோட்டத்தை கண்டுபிடித்து அழித்த அதிகாரிகள்
- அபின் தோட்டத்தை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
- இதன் மொத்த மதிப்பு ரூ.275 கோடி என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் 170 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட அபின் தோட்டத்தை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அபின் தோட்டத்தை அதிகாரிகள் அழித்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.275 கோடி என்று கூறப்படுகிறது.
அபின் காய்களில் இருந்து பெறப்படும் பாலானது வலி நிவாரணி, போதை மருந்துகளின் மூலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






