search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உங்கள் சகோதரர் பலாத்காரம் செய்ததாக புகாரளித்த மனைவிக்கு கணவன் அளித்த டுவிஸ்ட்
    X

    உங்கள் சகோதரர் பலாத்காரம் செய்ததாக புகாரளித்த மனைவிக்கு கணவன் அளித்த டுவிஸ்ட்

    • கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி மனைவி புகார் கூறினார்.
    • அப்போது, இனி நீ என் மனைவி இல்லை எனக்கூறி கணவர் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்ணை கடந்த 2-ம் தேதி கணவர் வெளியே சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் அவரது சகோதரர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

    கணவர் வீட்டுக்கு திரும்பியதும் அந்தப் பெண் கணவரிடம் நடந்ததைக் கூறி அழுதார். இதைக்கேட்ட அவரது கணவர் அளித்த பதில் அந்தப் பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்தக் கணவர், பெண்ணை நோக்கி, இனி நீ எனது மனைவியே இல்லை. நீ என்னுடைய மைத்துனி என கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் அந்த பெண் திகைத்துப்போனார்.

    அடுத்த நாள் கணவரும், கணவரின் தம்பியும் ஒன்றாக அந்தப் பெண்ணின் அறைக்கு வந்தனர். கணவர் மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து, துப்பட்டாவை எடுத்து அப்பெண்ணைக் கொல்ல பார்த்திருக்கிறார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பி வெளியே ஓடியிருக்கிறார்.

    இது குறித்து சமூக ஊடகம் வழியே அந்தப் பெண் புகாராக தெரிவித்ததுடன், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

    இதையடுத்து பாலியல் பலாத்காரம் (376), கொலை முயற்சி (307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாகபோலீஸ் சூப்பிரெண்டு சத்யநாராயண் பிரஜாபதி கூறுகையில், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    Next Story
    ×