search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீங்கள் வீசிய சேற்றில் தாமரை மலரும்- மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி
    X

    நீங்கள் வீசிய சேற்றில் தாமரை மலரும்- மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி

    • நீங்கள் எவ்வளவு சேற்றை நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும்.
    • முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது, பிரதமர் மோடியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். விவாதம் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். பதிலுரையின்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.

    இந்த அமளிக்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். பிரதமர் மோடி பேசியதாவது:-

    விமர்சனம் செய்யும் உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சேறு அவரிடத்தில் இருந்தது, என்னிடத்தில் நன்னீர் இருந்தது. யாரிடம் என்ன இருந்ததோ, அதுதான் மேலெழும்பி வந்தது. நீங்கள் எவ்வளவு சேற்றை அந்த நீர்நிலையில் கொட்டினாலும் தாமரை அதற்கு மேலேயே இருக்கும். தாமரை மலர்வதற்கு தாங்கள் செய்யும் இந்த சேவைக்காக நான் உங்களுக்கும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.

    நேற்று எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது, 60 ஆண்டுகளாக நாங்கள் வலுவான அடித்தளம் அமைத்து வைத்திருந்தோம் என்று சொன்னார். 2014ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை என்ன? என்பதை அறிய முயற்சி செய்தேன். காங்கிரஸ் குடும்பத்தின் எண்ணம் வலுவான அடித்தளம் அமைப்பதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்கு பார்த்தாலும் குழி தோண்டி வைத்திருந்தார்கள். அந்த சமயத்தில் சிறிய சிறிய நாடுகள்கூட முன்னேறி வந்துகொண்டிருந்தன.

    அவர்களின் காலம் நன்றாக இருந்தது. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை எல்லாம் அவர்களின் ஆட்சிதான். ஆனால் அவர்கள் செய்த பணிகள் எல்லாம், எப்படி இருந்தது என்றால், நாடு ஒரு பிரச்சனையைக்கூட தீர்த்து வைக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. பிரச்சனையை தீர்க்கவேண்டியது அவர்களின் கடமை. பிரச்சனைகளில் உழன்று நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் வேறு, அவர்களின் திட்டம் வேறு. இதனால் அவர்களால் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு தர முடியவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×