search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா: மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என வேண்டி விரலை துண்டித்த நபர்
    X

    கர்நாடகா: மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என வேண்டி விரலை துண்டித்த நபர்

    • பிரதமர் மோடியின் தீவிர பக்தரான வர்ணேகர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார்
    • பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது

    பிரதமர் மோடியின் தீவிர பக்தரான வர்ணேகர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார்.

    கர்நாடகா மாநிலம் சோனார்வாடா பகுதியைச் சேர்ந்தவர் அருண்.எஸ்.வர்ணேகர். இவர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர். பிரதமர் மோடிக்காக கோவில் கட்டி, அவரது உருவச்சிலையை வைத்து, தினமும் இரண்டு வேளை பூஜை செய்கிறார். வீட்டின் அறைகளில் தேசிய தலைவர்களின் படத்தை ஒட்டியுள்ளார்.

    இந்த நிலையில், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று தனது விரலை துண்டித்து பிரார்த்தனை செய்தார். மேலும், விரைல வெட்டும்போது, வெளியேறிய இரத்தம் மூலம் சுவரில் காளிமாதா மோடியைக் காக்க எனவும், 'மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்' எனவும் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த, அருண்.எஸ்.வர்ணேகர், பிரதமராக மோடி வந்ததால்தான் நமது நாடு வல்லரசு நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகள் பலவும் இந்தியாவை உற்று நோக்கி வருகிறது.

    தேசத்தையும், நாட்டு மக்களையும் மற்றவர்களைவிட மோடி அதிகமாக நேசிப்பதால், அவரே மீண்டும் பிரதமராக வரவேண்டும். இதற்காகத்தான் எனது விரலை துண்டித்தேன் என்றார்.

    அருண்.எஸ்.வர்ணேகர் கத்தியால் தன் விரலை வெட்டிக் கொள்ளும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    Next Story
    ×